சேலம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம் , பொம்மிடி, விடிவெள்ளி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கோவிந்தன் (67). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 17-ஆம் தேதி சீரகாபாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.