ஊரடங்கு: வெறிச்சோடி காணப்படும் சேலம்

தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற முழு முடக்கத்தால் சேலம் மாவட்டம் முழுவதும் முற்றிலும் முடங்கியுள்ளது.
வெறிச்சோடி காணப்படும் சேலம்.
வெறிச்சோடி காணப்படும் சேலம்.

தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற முழு முடக்கத்தால் சேலம் மாவட்டம் முழுவதும் முற்றிலும் முடங்கியுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க மே 24ஆம் தேதி ஒரு வாரம் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது. 

இதன் காரணமாக சேலம் டவுன் பகுதியில் தளர்வுகள் அற்ற பொது முடக்கத்தை யொட்டி கடைவீதி முதல் அக்கரகாரம் போன்ற பல்வேறு முக்கிய பகுதிகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு உள்ள பெரியார் மேம்பாலத்தில் தேவையின்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com