தீபாவளி பண்டிகை: பேளூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகை விருந்து இறைச்சிக்காக, ஆடுகள் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளும் நுகர்வோர்களும் குவிந்ததால் வாழப்பாடி அருகே  பேளூர் ஆட்டுச்சந்தையில், திங்கள்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. 
தீபாவளி பண்டிகை:  பேளூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகை விருந்து இறைச்சிக்காக, ஆடுகள் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளும் நுகர்வோர்களும் குவிந்ததால் வாழப்பாடி அருகே  பேளூர் ஆட்டுச்சந்தையில், திங்கள்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூர், அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், காரிப்பட்டி பகுதி  கிராம விவசாயிகள் மட்டுமின்றி, கல்வராயன்மலை, அருநுாற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை மலை கிராமங்களிலும் பெரும்பாலானோர் விவசாயத்தை முக்கிய தொழிலாக  கொண்டுள்ளனர். விவசாயிகள் மட்டுமின்றி, விவசாய கூலித் தொழிலாளர்களும், கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் வெள்ளாடு, செம்மறிஆடு, வளர்ப்பை  முக்கியத் தொழிலாக செய்து வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த பேளூரில், 50 ஆண்டுக்கும் மேலாக திங்கட்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்கான வாரச்சந்தை கூடிவருகிறது. இதனால், மாவட்ட அளவில் ஆடுகள் வளர்ப்பு தொழிலில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பேளூர் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு வருகின்றன. தீபாவளி, பொங்கல், ஆடி 18,  ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வாழப்பாடியையொட்டி நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், நுகர்வோர்களும்,பேளூர் வாரச்சந்தையில் வளர்ப்புக்காவும், இறைச்சிக்காவும் ஆடுகளை விற்பனையும், கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனால் வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், பண்டிகை விருந்துக்கும், இறைச்சி விற்பனைக்காகவும் இன்று திங்கட்கிழமை காலை கூடிய ஆட்டுச்சந்தையில் ஆடுகள் கொள்முதல் செய்ய பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், நுகர்வோர்கள் குவிந்தனர். 

இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, ஒரு ஆட்டிற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை கூடுதல் விலை கிடைத்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் வரை ரூ.8 ஆயிரத்திற்கு விலைபோன ஒரு ஆட்டுக்கிடா இந்த வாரம் ரூ. 9 ஆயிரம் வரை விலை போனது.  ஓராண்டுக்குப் பிறகு ஆடுகளுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் ஆடு வளர்க்கும் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com