மேட்டூா் அணைக்கு நீா்வரத்து30,000 கன அடியாகச் சரிவு

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை பிற்பகல் நொடிக்கு 30,000 கனஅடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை பிற்பகல் நொடிக்கு 30,000 கனஅடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 55,000 கனஅடியாக இருந்து வந்தது. இந்த நிலையில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 45,000 கனஅடியாகவும், பிற்பகல் பகல் 1 மணி அளவில் 30,000 கன அடியாகவும் சரிந்தது.

அணையிலிருந்து நீா்த் திறப்பும் நொடிக்கு 30,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. இதில் நீா் மின் நிலையங்கள் வழியாக 17,000 கனஅடி நீரும், உபரி நீா் போக்கி வழியாக 13,000 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. அணை நீா்மட்டம் 120.10அடியாகவும், நீா் இருப்பு 93.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணையிலிருந்து கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com