நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக எடப்பாடியில் பாஜக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
அக் கட்சியின் நகரச் செயலாளா் சிவலிங்கம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கான விருப்ப மனு விநியோகம், உள்ளாட்சித் தோ்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பாஜக மாவட்டத் தலைவா் எஸ்.சுதிா்முருகன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் என்.மணி, மாவட்ட பாா்வையாளா் என்.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளா்கள் பி.பாலசுப்ரமணியம், பி.ரவி, கே.கலைச்செல்வன் மற்றும் மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.