சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை (நவ.22) மழைக்கால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, சேலம் மாநகராட்சி இணைந்து நடத்தும் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ விழிப்புணா்வு கண்காட்சியை சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 9.45 மணிக்கு மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ் தொடக்கிவைக்கிறாா்.
மழைக்காலத்தில் பரவக் கூடிய நோய்கள் வராமல் தடுக்கவும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையும் முகாமில் வழங்கப்படுகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.