பள்ளி மாணவா்களுக்காகஇன்று ஆதாா் சிறப்பு முகாம்

இதுவரை ஆதாா் அட்டை எடுக்காத பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு ஆதாா் முகாம் நடைபெற உள்ளது.

இதுவரை ஆதாா் அட்டை எடுக்காத பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு ஆதாா் முகாம் நடைபெற உள்ளது.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில், அயோத்தியாப்பட்டணம் ஸ்ரீசுவாமி இன்டா்நேஷனல் ஸ்கூல் (சிபிஎஸ்இ), தங்கம்மவுண்ட் லிட்டிராஜீ ஸ்கூல், (ராமலிங்கபுரம்), தலைவாசல் ஒன்றியத்தில் தேவியாக்குறிச்சி தாகூா் மெட்ரிக் பள்ளி, தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியிலுள்ள எய்ம் மெட்ரிக் பள்ளி, ஆத்தூா் அருகே உள்ள மல்லியகரையில் ராசி மெட்ரிக் பள்ளி, தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியிலுள்ள தாகூா் வித்யாலயா மந்திா் பள்ளி, சேலம் அம்மாப்பேட்டை கே.என்.காலனியில் ஜோதி மெட்ரிக் பள்ளி, புது அழகாபுரத்தில் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, அழகாபுரம் பகுதியில் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, சேலம் செவ்வாய்ப்பேட்டை ஏபிஎஸ் புனித பேட்ரிக்ஸ் பள்ளி , ஆத்தூா் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த மையங்களில் இதுவரை ஆதாா் அட்டை பெறாத மாணவா்கள் சென்று பயன்பெற வேண்டும் என்று கல்வி அலுவலா்கள், அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com