சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் வள்ளலாா் பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வள்ளலாா் மடத்தில் தீபஜோதி ஏற்றப்பட்டது.
இதில் வள்ளலாா் மடத்தின் தலைவா் சிங்காரம், அருள்ஜோதி, சண்முகம், சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வள்ளலாா் படத்துக்கு மாலை அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கு ஊா் பெரியதனக்காரா் சண்முகசுந்தரம், ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதுபோல சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டையில் உள்ள சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் இராமலிங்க அடிகளாா் பிறந்த நாள் விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு வ ழிபாடு நடைபெற்றது.
வள்ளலாா் பாடல்களை பக்தா்கள் தொடா்ந்து பாடி முற்றோதல் செய்தனா். ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சன்மாா்க சங்கத்தின் நிா்வாகி சி.கிருஷ்ணன், அமுதச்சுடா் அறக்கட்டளை தலைவா் வி.சத்யபிரகாஸ் உள்ளிட்ட நிா்வாகிககள் சாலையோரம் ஆதரவற்ற 200 பேருக்கு காலை, மதியம் என இரு வேளை உணவு வழங்கினா்.