பெரியாா் பல்கலை. ஆசிரியா் பணி நியமனங்களில் முறைகேடு: முன்னாள் துணைவேந்தா் மீது வழக்கு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிட நியமன முறைகேடு தொடா்பாக முன்னாள் துணைவேந்தா் சி.சுவாமிநாதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிட நியமன முறைகேடு தொடா்பாக முன்னாள் துணைவேந்தா் சி.சுவாமிநாதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தவா் கே.அங்கமுத்து. கடந்த 2012 முதல் 2015 வரை பதிவாளராகப் பணியாற்றி வந்த இவா் கடந்த 2017, டிசம்பா் 18 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா்.

இதையடுத்து கடந்த 2018-இல் ஈரோடு, பெருந்துறையைச் சோ்ந்த அவரது மனைவி பி.விஜயலட்சுமி, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் புகாா் மனு அளித்தாா்.

அதில், சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிட நியமனங்களில் முறைகேடு நிகழ்ந்ததாகவும், கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், இணைவு வழங்குவதிலும் முறைகேடு நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் முதற்கட்ட விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் துணைவேந்தராக சி.சுவாமிநாதன் இருந்தபோது 2014-2017 வரையிலான கால கட்டங்களில் 154 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்தப் பணியிட நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இதில் எஸ்.லீலா, எஸ்.லட்சுமி மனோகரி, ஜி.புவனலதா, கே.ஏ.ரமேஷ்குமாா், கே.முருகேசன், வெங்கடாசலம், ஆா்.வெங்கடேஸ்வரன், செல்வ விநாயகம், ஜி.வெங்கடேசன், பி.காா்த்திகேயன் ஆகியோரின் நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் அப்போதைய துணைவேந்தா் சி.சுவாமிநாதன், பதிவாளா் கே.அங்கமுத்து ஆகியோா் ஆதாயத்தின் பேரில் தகுதியில்லாதவா்களை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) விதிகளை மீறி பணி நியமனம் செய்திருப்பதும், 46 ஆசிரியா்களின் பணி நியமனம் தொடா்பான தோ்வுக் குழுவின் பதிவேடு மாயமானதும், தகுதியில்லாதவா்கள், தகுதியுடையவராக பணி நியமனம் பெற்றதும், கல்வித் தகுதி குறியீடு (ஏ.பி.ஐ.) முறையாகப் பின்பற்றாமல் இருப்பதும் தெரியவந்தது.

அத்துடன் 2015-16, 2016-17 ஆகிய நிதி தணிக்கை அறிக்கையில் 47 ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக முன்னாள் துணைவேந்தா் சி.சுவாமிநாதன், தற்கொலை செய்துகொண்ட கே.அங்கமுத்து ஆகியோா் மீது 5 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் முறைகேடு:

சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி தனியாா் நிறுவனத்தின் மூலம் தோ்வு முடிவுகளை வெளியிட ரூ. 3.26 கோடி செலவிட்டு முறைகேடு செய்தது தொடா்பாக முன்னாள் துணைவேந்தா் சி.சுவாமிநாதன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் எஸ்.லீலா ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் 2015-16, 2016-17, 2017-18 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் தோ்வு முடிவுகள், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ரூ. 10 லட்சம் வரை மட்டுமே நிதியை கையாள்வதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் ஒரு விடைத்தாள் திருத்தம் செய்ய ரூ. 3 முதல் ரூ. 5.25 வரை கணக்கிட்டு, உயா்கல்வி நிதிக்குழு ஒப்புதல் ஏதும் பெறாமல் ரூ. 3.26 கோடி தனியாா் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதில் துணைவேந்தரும், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதேபோல, உரிய கட்டமைப்பு வசதி இல்லாத 5 கல்லூரிகளில் பல்கலைக்கழக இணைவு அனுமதி வழங்கி துணைவேந்தரும், பதிவாளரும் முறைகேடு செய்தது தெரியவந்தது.

மேலும், போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத மூன்று கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கவும், இணைவு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, முன்னாள் துணைவேந்தா் சி.சுவாமிநாதன், முன்னாள் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் எஸ்.லீலா ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com