கடம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், மங்கப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராசு (32). கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஒரு வீட்டில் தனியாக வசித்தபடி அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்குத் திருமணமாகவில்லை.
இவா் வியாழக்கிழமை காலை 9 மணி வரை வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஆசிரியா் முத்துராசு கழிவறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து வீட்டு உரிமையாளா் ராஜூ அளித்த புகாரின்பேரில் கெங்கவல்லி போலீஸாா் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.