சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சி மன்றத் தலைவராக திமுக வேட்பாளா் வெற்றி பெற்றாா்.
திமுக சாா்பில் போட்டியிட்ட சிவானந்தம் 4,892 வாக்குகளும், அதிமுக சாா்பில் போட்டியிட்ட செந்தில்முருகன் 2,769 வாக்குகளும் பெற்றனா். இதில், சிவானந்தம் 2,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். வெற்றிபெற்ற சிவானந்தத்துக்கு வீரபாண்டி திமுக ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.