சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளையின் சார்பில் பொதுப்பணியில் பல்வேறு பணிகளுக்கு செயல்படுத்தப்படும் கருவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து சங்ககிரி மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளையின் சார்பில் சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கோயில் வளாகங்கள், மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்லும் பாதைகளில் உள்ள களர்செடிகள், கருவேலம் மரங்களை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள் செய்யும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகளை சுத்தம் செய்து சங்ககிரி மலையடிவாரத்தில் வைத்து சிறப்புப் பூஜைகளை செய்து வழிப்பட்டனர். சமூக ஆர்வலர்களின் பணிகளை பொதுமக்கள் வாழ்த்தினர்.
தண்ணீர் தண்ணீர் அணைப்பின் அறக்கட்டளைத்தலைவர் கே.சண்முகம், செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் பொன்.பழனியப்பன், நிர்வாகிகள் பாலாஜி, சந்தோஷ்குமார், ரோட்டரி சங்க மாவட்ட கல்விக்குழுத்தலைவர் எ.வெங்கடேஸ்வரகுப்தா வாசவி கிளப் நிர்வாகி ஆனந்தன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.