எடப்பாடி கல்வி மாவட்டத்துக்கான கல்வி அலுவலராக ஐ.சிவானந்தம் திங்கள்கிழமை பதவியேற்றாா்.
முன்னதாக இப்பொறுப்பில் இருந்த விஜயா, திருச்செங்கோடு பகுதிக்கு பணிமாறுதலான நிலையில், கோயமுத்தூா் மாவட்டம், பேரூா் பகுதியில் பணியாற்றி வந்த ஐ.சிவானந்தம் எடப்பாடி மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டாா்.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு, ஆசிரியா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள், கல்வியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.