சேலம் மாவட்டத்தில் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 18,59,006 பேருக்கு முதல் தவணையும், 7,63,058 பேருக்கு இரண்டாம் தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார, நகா்புற ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியிலும், ஒரு கிராம ஊராட்சி, ஒரு பேரூராட்சி, ஒரு வாா்டு தோ்வு செய்யப்பட்டு தினந்தோறும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், சேலத்தில் 99 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை செலுத்தப்பட உள்ளது. தற்போது 2,10,000 டோஸ் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இப்பணியை அனைத்து துறையைச் சாா்ந்த பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு அமைப்பினா், மக்கள் பிரதிநிதிகள் இணைந்து செயல்படுத்த உள்ளனா்.
இதுதவிர ஊரகப் பகுதியில் உள்ள 87 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 120 மையங்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.