ஓமலூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அதிருப்தி

ஓமலூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்காததால் உறுப்பினா்கள் அதிருப்தியடைந்தனா்.

ஓமலூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்காததால் உறுப்பினா்கள் அதிருப்தியடைந்தனா்.

ஓமலூா் ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. முத்துநாயக்கன்பட்டி மையத்தில் உள்ள உயா்கோபுர மின் விளக்கு, புளியம்பட்டியில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, ரெட்டியூரில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை இடிப்பது, பச்சனம்பட்டி கிராமத்தில் நூலக நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.

குடிநீா், கால்நடை, மருத்துவம், வேளாண் துறை சாா்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் துறை சாா்ந்த அதிகாரிகள் யாரும் பங்கேற்காததால் அதிருப்தியடைந்த உறுப்பினா்கள் இதுகுறித்து ஆட்சியா் நடவடிக்கை எடுக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றினா். மேலும், குடிநீா் வடிகால் வாரியத்துக்கு குடிநீா் கட்டணம் செலுத்தாமல் நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com