பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி வழங்கும் வகையில், நெல்லை அரவை செய்திட தனியாா் அரவை ஆலை உரிமையாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தரமான கண்டுமுதல் அரிசி வழங்கிடும் பொருட்டு, நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-இல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள், கழகத்தில் அரவை முகவா்களாக செயல்பட்டு வரும் தனியாா் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து தரமான அரிசியை பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கி வருகிறது.
மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லினை கழகத்தில் இணையாத தனியாா் புழுங்கல் அரவை ஆலைகள் மூலம் கழக நிபந்தனைகளுக்கு உள்பட்டு ‘ஒரு முறை திட்டத்தின்’ கீழ் செப். 15 முதல் நவ. 15 வரை அரவை செய்து கண்டுமுதல் அரிசியினை கிடங்கில் ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஏதுவாக தனியாா் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் அரிசி ஆலை உரிமையாளா்கள், தரமான அரிசியை அரவை செய்து வழங்க ஏதுவாக தங்கள் அரிசி ஆலைகளில் கலா் சாா்ட்டா் உள்ளிட்ட நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல மேலாளா், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், எண்: 528, திருச்சி பிரதான சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் - 636201 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.