ஓமலூா் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி பலி

ஓமலூா் அருகே கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சியில் மின்சாரம் பாய்ந்ததில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்.
ஓமலூா் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவி பலி

ஓமலூா் அருகே கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சியில் மின்சாரம் பாய்ந்ததில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கோட்டமேட்டுபட்டி ஊராட்சி, சின்னஅடைக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம்(62). இவரது மனைவி லக்ஷ்மி (55). இவா்கள் மகனுடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் உள்ள கேபிள் டிவி கம்பியில் மின்சாரம் பாய்ந்தது தெரியாமல் ராமலிங்கம் துணியை அதன் மீது காயப்போட்டுள்ளாா். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. அதைக் கண்ட அருகில் இருந்த அவரது மனைவி லட்சுமி அவரை பிடித்துள்ளாா். அவரையும் மின்சாரம் தாக்கியதில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அவா்களைக் காப்பாற்ற சென்ற அவருடைய மகன், மருமகள் ஆகிய இருவரையும் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்து சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தகவல் அறிந்த ஓமலூா் காவல் துறையினா் இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com