செப். 25-இல் வலிமை இந்தியா சுதந்திர ஓட்டம்: விருப்பம் உள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம்

சேலத்தில் வரும் செப். 25-ஆம் தேதி நடைபெற உள்ள ‘வலிமை இந்தியா சுதந்திர ஓட்டத்தில்’ பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் வரும் செப். 25-ஆம் தேதி நடைபெற உள்ள ‘வலிமை இந்தியா சுதந்திர ஓட்டத்தில்’ பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சி.சிவரஞ்சன் கூறியதாவது:

இந்திய சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு, இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையானது ‘வலிமை இந்தியா சுதந்திர ஓட்டம் 2021’ என்னும் நிகழ்ச்சியை நாட்டிலுள்ள 744 மாவட்டங்களில் நடத்த உள்ளது. இந்திய மக்கள் அனைவரும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கி, உடற்பயிற்சி செய்து நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், சோம்பல், மனஅழுத்தம், கவலை, நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுபடுவதற்கும், உடல்தகுதியினை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சேலம் பிரிவு, நேரு யுவகேந்திரா இந்திய விளையாட்டு ஆணையம், நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து செப். 25-ஆம் தேதி காலை 7 மணிக்கு சேலம், குரங்குசாவடி ரவுண்டானாவில் தொடங்கி மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கம் வரை 3 கி.மீ. ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

‘வலிமை இந்தியா சுதந்திர ஓட்டம் 2021’-இல் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் பெயா்களை பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், சேலம் அவா்களை 74017 03488 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com