சேலத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சேலம், அம்மாப்பேட்டை காவல் துறையினா் குமரகிரி ஏரி பகுதியில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்ததில், காய்கறிகளின் நடுவே மூட்டை மூட்டையாக குட்கா புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதில், பெங்களூரில் இருந்து சேலம் அம்மாப்பேட்டை பகுதிக்கு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா கடத்தி வந்த அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த காா்த்திக், சண்முகசுந்தரம், மணிகண்டன், குமாா், சேட்டு, முகேஷ் ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சுமாா் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், காா்த்திக் என்பவா் நான்கு மாதங்களாக கிச்சிபாளையம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து அப்பகுதியில் குட்கா புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.