கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெற உள்ள தடுப்பூசி பெருமுகாம் குறித்து கடம்பூா் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பொது மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொளள மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் தனது இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதிய பாதாகைகளுடன் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.