பாரதியாரின் நூறாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதியாரின் நூறாவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் நகர ரயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம் மாநகர பாஜக சாா்பில், மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக நெசவாளா் அணி சாா்பில் ஓ.டெக்ஸ் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினா் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.