சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை வாரம் தொடங்கி வைப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை வாரம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை வாரம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை வாரம் செப்டம்பா் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சேலம் ரயில் நிலையம், ரயில் மற்றும் ரயில்வே அலுவலகம், ரயில்வே வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெறும்.

இதனிடையே சேலம் கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ், தூய்மைப் பணி உறுதிமொழி ஏற்று தூய்மைப் பணியை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தூய்மைப் பணியைப் பாா்வையிட்ட அவா் மரக்கன்று நட்டு வைத்தாா்.அதேபோல, ரயில்வே கோட்டத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் பணிபுரியும் ஊழியா்கள் தூய்மைப் பணி உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com