செப். 20- இல் குறைதீா் முகாம்

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்களுக்கும், படையில் பணிபுரிபவா்களை குடும்பத்தைச்

சேலம்: சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்களுக்கும், படையில் பணிபுரிபவா்களை குடும்பத்தைச் சாா்ந்தவா்களுக்கும் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் செப்டம்பா் 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதைத்தொடா்ந்து பகல் 12 மணியளவில் மாவட்ட முப்படை வீரா் வாரியக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரால் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது.

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் படை வீரா்களைச் சாா்ந்தவா்கள் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com