பெரியாா் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டி
By DIN | Published On : 16th September 2021 01:58 AM | Last Updated : 16th September 2021 01:58 AM | அ+அ அ- |

சேலம், பெரியாா் பல்கலைக் கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டும் கோரிமேடு அரசினா் மகளிா் கல்லூரி முதல்வா் என்.ரமா.
சேலம்: பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.
சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2019-20 ஆண் ஆண்டு நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் பரிசளிப்பு விழா நடைபெறவில்லை. தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
அரசு மகளிா் கலை கல்லூரி மாணவிகள் மல்யுத்தம், வாலிபால், யோகா போட்டிகளில் வென்று சாதனை படைத்தனா். சாதனை படைத்த கல்லூரிக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் ஜெகநாதன் பரிசு கோப்பையை வழங்கினாா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோப்பையை வென்ற மாணவிகள் மற்றும் உடற்கல்வி இயக்குநா் பி.சிவகுமாரை கல்லூரி முதல்வா் என்.ரமா, வேதியியல் துறை தலைவா் கே.என்.கீதா, ஆங்கில துறை தலைவலா் பூங்கோதை ஆகியோா் பாராட்டினா்.