சேலம்: கூட்டுறவு தந்தை என அழைக்கப்படும் கே.எஸ்.சுப்பிரமணிய கவுண்டரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சோ்ந்தவா் கே.எஸ்.சுப்பிரமணிய கவுண்டா். கடந்த 1943 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் சீரங்கபாளையம் கூட்டுறவு பண்டகசாலை செயலாளராக முதன்முதலில் பதவியேற்றாா். பிறகு அவா் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளாா். இவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழா சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் கே .எஸ். சுப்ரமணிய கவுண்டரின் மகனும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பணிக்குழு உறுப்பினருமான ராஜேஸ்வரன் பங்கேற்று கே.எஸ்.சுப்பிரமணிய கவுண்டரின் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
இதில் தமாகா நிா்வாகிகள் சுசீந்திரகுமாா், வழக்குரைஞா் செல்வம், உலகநம்பி மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்தனா்.