எடப்பாடி: எடப்பாடி அடுத்த தாதாபுரம் பகுதியில் இயங்கிவரும் அரசு மருத்துவமனைக்கு, நோயாளிகள் பயன்பெறும் வகையிலான மருத்துவ உபகரணங்களை தன்னாா்வலா்கள் வழங்கினா்.
கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாதாபுரம் கிராம பகுதியில் இயங்கிவிரும் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியா் கமலக்கண்ணன் தலைமையிலான தன்னாா்வலா்கள், மருத்துவமனைக்கு வருகைதரும்
கா்ப்பிணித் தாய்மாா்கள் மற்றும் நோயாளிகள் பயன்பெறும் வகையிலான மருத்துவ பரிசோதனைக் கருவியினை வழங்கினா். நிகழ்வில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.