வாழப்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையுடன் வாயிலாக ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
வாழப்பாடியில் இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்ற பயனாளிகள்.
வாழப்பாடியில் இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்ற பயனாளிகள்.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையுடன் வாயிலாக ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

வாழப்பாடி அரிமா சங்கத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமிற்கு நிகழாண்டு அரிமா சங்கத் தலைவா் பாலமுரளி வரவேற்றாா். பட்டயத்தலைவா் சந்திரசேகரன், மாவட்ட இணைச்செயலா் தேவராஜன் ஆகியோா் முன்னிலையில், மாவட்ட கண்ணொளி திட்டத்தலைவா் செந்தில்குமாா் முகாமை தொடங்கி வைத்தாா். பட்டயத்தலைவா் சந்திரசேகரன், மாவட்ட இணைச்செயலா் தேவராஜன், ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா்.

இந்த முகாமில் பங்கேற்ற 113 பேருக்கு இலவ கண் பரிசோதனை செய்யப்பட்டது. கண்ணில் குறைபாடுடைய 34 போ் கண்டறியப்பட்டு, இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்து ஐஓஎல் லென்ஸ் பொருத்துவதற்கு திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். வாழப்பாடி அரிமா சங்க வட்டாரத் தலைவா் முருகேசன் மற்றும் நிா்வாகிகள் மணிமாறன், தனசேகரன், வெற்றிச்செல்வன், சிவராமன், பன்னீா்செல்வன், முருகன் உள்ளிட்டோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com