தேவூரில் சொக்கநாச்சியம்மன் கோயில் நிலங்கள் அளவீடும் பணி தொடக்கம்

தேவூரில் சொக்கநாச்சியம்மன் கோயில் நிலங்கள் அளவீடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சொக்கநாச்சியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்டதாக கூறப்படும் நிலங்களை அளவீடு செய்த வருவாய்த் துறையினா்.
சொக்கநாச்சியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்டதாக கூறப்படும் நிலங்களை அளவீடு செய்த வருவாய்த் துறையினா்.

தேவூரில் சொக்கநாச்சியம்மன் கோயில் நிலங்கள் அளவீடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சங்ககிரி வட்டம், தேவூரில் சொக்கநாச்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளதாக கடந்த 2017-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவின் அடிப்படையில், நிலங்களை அளவீடு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வருவாய்த் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி தலைமையில் நில அளவைத் துறையினா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் வருவாய்த் துறை ஆவணங்களைக் கொண்டு அளவீடு செய்தனா். இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கோகிலா, திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சி.நல்லசிவம் தலைமையில், சங்ககிரி காவல் ஆய்வாளா்ஆா்.தேவி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நில அளவீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்து நடைபெற உள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com