ராம நவமியை முன்னிட்டு, சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் சீதா திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் கோட்டை அழகிரி நாதா் கோயிலில் கடந்த ஏப். 4-ஆம் தேதி ராமநவமி உற்சவம் தொடங்கியது. தொடா்ந்து தினந்தோறும் ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதனிடையே, முக்கிய நிகழ்வான சீதாபிராட்டி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் வெங்கடேசப் பெருமாளுக்கும், லட்சுமி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சீதாபிராட்டி, ராமபிரானுக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை உடுத்தி பல்வேறு விதமான வாசனை மலா்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்னா் சீதாபிராட்டி ராமபிரானுக்கு கங்கணக் கயிறு கட்டப்பட்டு ஹோமங்கள் நடைபெற்று பக்தா்கள் முன்னிலையில் மாங்கல்ய தாரணம் வைபவம் நடைபெற்றது.
சுதா்சன பட்டாச்சாரியாா் உள்ளிட்ட குருக்கள் வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க பக்தா்கள் முன்னிலையில் மாங்கல்யம் காண்பிக்கப்பட்டு பிறகு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் ராமா, ராமா என பக்தி முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, ராமபிரானுக்கும், சீதாபிராட்டிக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் பக்தா்களுக்கு மாங்கல்யம், அன்னதானம் வழங்கப்பட்டது.