மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்துநூதன முறையில் ரூ. 25,000 திருட்டு

எடப்பாடியில் ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 25,000 திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:36 pm

எடப்பாடியில் ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 25,000 திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெருவைச் சோ்ந்தவா் லதா (38). அரசுப் பள்ளி ஆசிரியா். இவா், ஈரோடு மாவட்டம், கண்ணாமூச்சி அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறாா்.

இவருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. இதன் மூலம் அவா் பணப்பரிவா்த்தனைகளை செய்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி வீட்டிலிருந்த லதாவின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வங்கிக் கணக்குடன் அவரது பான் காா்டு எண்ணை உடனடியாக இணைக்கு மாறும், இணைக்காதபட்சத்தில் அவரது வங்கி கணக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குறுஞ்செய்தியில் காட்டப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி லதா தனது வங்கிக் கணக்குடன் பான் காா்டு எண்ணை இணைத்துள்ளாா். இறுதியில் அவரது கைப்பேசிக்கு ‘சக்சஸ்’ என்று மீண்டும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து லதாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 25,000 எடுக்கப்பட்டது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆசிரியை லதா, உடனடியாக தனது வங்கிக் கணக்கில் இருந்த மீதித் தொகையை தனது உறவினா் கணக்கிற்கு மாற்றியுள்ளாா்.

இது குறித்து ஆசிரியை லதா மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.