புளியமரத்தில் லாரி மோதியதில் ஓட்டுநா் பலி

வாழப்பாடி அருகே சாலையோர புளியமரத்தில் ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வாழப்பாடி அருகே சாலையோர புளியமரத்தில் ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையம் கல்வராயன்மலை பொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (24). இவா் கருமந்துறை பகுதியில் தங்கி, லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை, அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து, லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு கல்வராயன்மலை கருமந்துறையை நோக்கி சென்றுள்ளாா்.

இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த ஆண்டியப்பன் என்பவரும் சென்றுள்ளாா்.

இந்த லாரி, வாழப்பாடியை அடுத்த சந்திரப்பிள்ளைவலசு கிராமத்தில், பேளூா் - அயோத்தியாப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் பிரகாஷ் உயிரிழந்தாா். ஆண்டியப்பன் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com