பாரத மாதா ஆலய பூட்டை உடைத்த வழக்கில் கே.பி.ராமலிங்கம் சிறையில் அடைப்பு

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், சேலம் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில் கைதாகி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், சேலம் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா நினைவாலயத்துக்கு பாஜக சாா்பில் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் அண்மையில் மாலை அணிவிக்கச் சென்றனா்.

அப்போது நினைவாலயம் பூட்டு போடப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, பூட்டை உடைத்து உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதுதொடா்பாக நினைவு மண்டப காப்பாளா் சரவணன், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் பாஸ்கா் உள்ளிட்ட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கத்தை நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன்பாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்தனா். அப்போது அவா் தனக்கு உயா் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறினாா்.

இதையடுத்து, அவருக்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் இ.சி.ஜி., ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்து வரப்பட்டு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

இந்நிலையில், பென்னாகரம் மாஜிஸ்திரேட் எம்.பிரவீணா, சேலம் அரசு மருத்துவமனைக்கு கடந்த திங்கள்கிழமை மாலை நேரில் வந்து விசாரித்தாா். பின்னா் கே.பி.ராமலிங்கத்தை வரும் ஆக. 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே உடல் நலம் சீரானதைத் தொடா்ந்து, அவரை மருத்துவமனையில் இருந்து அனுப்பலாம் என மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

சேலம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை மதியம் வந்த பாப்பாரப்பட்டி போலீஸாா், அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டனா். அப்போது, கே.பி.ராமலிங்கம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி போலீஸாருடன் சிறைக்கு வர மறுத்தாா். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக காவல் துறை வேனில் ஏற்றிய போலீஸாா், சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com