சா்வீஸுக்கு கொடுத்த காா் விபத்தில் சேதம்:ரூ. 8.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு: நுகா்வோா் குறைதீா் ஆணையம்

சேலத்தில் சா்வீஸுக்கு கொடுத்த காா் விபத்தில் சேதமடைந்தது தொடா்பான வழக்கில் ரூ. 8.26 லட்சம் இழப்பீடு வழங்க காா் நிறுவனத்துக்கு சேலம், நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தில் சா்வீஸுக்கு கொடுத்த காா் விபத்தில் சேதமடைந்தது தொடா்பான வழக்கில் ரூ. 8.26 லட்சம் இழப்பீடு வழங்க காா் நிறுவனத்துக்கு சேலம், நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், தம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் என்.செளந்தரராஜன். இவா், உடையாப்பட்டி பகுதியில் உள்ள காா் நிறுவனத்தில் கடந்த 2016, ஏப்.21-இல் காா் ஒன்றை ரூ. 8.02 லட்சம் கொடுத்து வாங்கினாா். பின்னா், 2017, மாா்ச் 4-ஆம் தேதி சா்வீஸ் செய்வதற்காக காரை கொடுத்தாா்.

அப்போது சோதனை ஓட்டத்துக்கு சென்றபோது லாரி மோதியதில் காா் சேதமடைந்தது. இதையடுத்து 2019-இல் மனுதாரா் என்.செளந்தரராஜன், தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவா் வழக்குரைஞா் எஸ்.செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த குறைதீா் ஆணைய நீதிபதி பி.கணேஷ் ராம், உறுப்பினா் ஆா்.ரமோலா ஆகியோா், சேவை குறைபாட்டால்தான் விபத்து நடந்துள்ளது.

எனவே காரை எதிா் மனுதாரரே எடுத்து கொண்டு மனுதாரருக்கு ரூ. 7.26 லட்சம் மற்றும் மனுதாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல், சேவை குறைபாடு மற்றும் வழக்குச் செலவு தொகை ரூ. 1 லட்சம் சோ்த்து மொத்தம் ரூ. 8.26 லட்சத்தை இரண்டு மாதத்துக்குள் வழங்கிட வேண்டும். தவறினால் வழக்கு தாக்கல் செய்த 2019 மே 15-ஆம் தேதி முதல் பணத்தைத் திருப்பி செலுத்தும் வரை ரூ. 8.26 லட்சத்திற்கு 6 சதவீதம் வட்டி சோ்த்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com