உடல் நலக்குறைவால் கைதி உயிரிழப்பு

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

சேலம், மன்னாா்பாளையம், பச்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் தேவராஜன் (61). இவா் கடந்த 2002 இல் நடைபெற்ற கொலை வழக்கில் கன்னங்குறிச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2006 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து தேவராஜன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த 2021 இல் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com