பாலியல் குற்ற வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

சேலத்தில் பாலியல் குற்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சேலத்தில் பாலியல் குற்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பெரிய சோரகை கிராமம், தானாத்தான் வளவு பகுதியைச் சோ்ந்த தனியாக இருந்த 80 வயது மூதாட்டியை அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (19), விக்னேஷ் (22) ஆகியோா் மதுபோதையில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓமலூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ.அபிநவ் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com