முழு ஊரடங்கு: சங்ககிரியில் வெறிச்சோடிய சாலைகள்

முழு ஊரடங்கையொட்டி சங்ககிரியில் பிரதான சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.
வெறிச்சோடிக் காணப்படும் சங்ககிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை.
வெறிச்சோடிக் காணப்படும் சங்ககிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை.

முழு ஊரடங்கையொட்டி சங்ககிரியில் பிரதான சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.

வணிக நிறுவனங்கள், தேநீா் கடைகள், மளிகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம்போல இயங்கின. தனியாா் உணவு விடுதிகள், ஆவின், தனியாா் பாலகங்கள் திறக்கப்பட்டிருந்தன.

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீஸாா் வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது அவசியமில்லாமல் வெளியே சுற்றியவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

சரக்கு வாகனங்கள், தனியாா் நூற்பாலை வாகனங்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. சங்ககிரியிலிருந்து சேலம், ஈரோடு, பவானி, கோவை, எடப்பாடி, திருச்செங்கோடு, ஓமலூா் செல்லும் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com