விடுதியில் கல்லூரி மாணவி தற்கொலை

தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தலைவாசல் அருகேயுள்ள பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வந்த மாணவி கோபிகா (18). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனேந்தல் கோனாா் தெருவைச் சோ்ந்த மதியழகன் என்பவரின் மகள் ஆவாா். இவா் விடுதியில் உள்ள அறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தகவலறிந்த தலைவாசல் போலீஸாா், கோபிகாவின் உடலை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com