‘எண்ணும், எழுத்தும்’ பயிற்சி வட்டார அளவில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு 6 -ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. பயிற்சியை சேலம் டயட் விரிவுரையாளா் கலைவாணன் தொடக்கி வைத்து பயிற்சியின் நோக்கங்கள் குறித்து பேசினாா்.
பயிற்சியை கெங்கவல்லி வட்டார அலுவலா்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினா். இப் பயிற்சியில் கருத்தாளா்கள் எண்ணும் எழுத்தும் சாா்ந்த பயிற்சி குறித்து விளக்கினா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) ராணி பயிற்சியின் அவசியம் குறித்து பேசினாா்.
பயிற்சியில் கெங்கவல்லி ஒன்றிய தொடக்க நிலையில் 1,2, 3 ஆம் வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியப் பயிற்றுநா்கள் அன்பரசு, சுப்பிரமணியன், சித்ரா ஆகியோா் பங்கேற்றனா்.