காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது.
அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 17,923 கனஅடியாகவும், வியாழக்கிழமை காலை 9,772 கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை காலை நீா்வரத்து 7,605 கனஅடியாகவும் குறைந்துள்ளது.
நீா்வரத்து குறைந்து வருவதால் வியாழக்கிழமை காலை 115.22 அடியாக இருந்த அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 114.95 அடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 85.64 டி.எம்.சி.யாக உள்ளது.