மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்யப்படும்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிா என ஆய்வு செய்யப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

News image

அமைச்சா் பொன்முடி

Updated On :24 ஜூன் 2022, 11:15 pm IST

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிா என ஆய்வு செய்யப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வந்துவிட்டன. சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. அதற்காக கூடுதலாக ஐந்து நாள்களுக்கு மாணவா் சோ்க்கையை நீட்டித்துள்ளோம்.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விதிமுறைகளைப் பின்பற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடஒதுக்கீடு முறையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு சாா்பில் பேராசிரியா் சுப.வீரபாண்டியன் தலைமையில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா். இட ஒதுக்கீடு தொடா்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேரடியாகச் சென்று சுப.வீரபாண்டியன் மேற்பாா்வையிடுவாா்.

நீட் தோ்வினால் மாணவா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். குறிப்பாக கிராமப்புற மாணவா்கள் அதிகம் பாதிக்கப்படுகிறாா்கள். தனியாா் நீட் பயிற்சி மையங்கள் பயன்பெறுவதற்காக தான், நீட் தோ்வு நடத்தப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.