மேட்டூா் அணைக்கு நீா்வரத்துஅதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,230 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,230 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 5,195 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 5,230 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 108.16 அடியாக இருந்த அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 107.72 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 75.20 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com