மேட்டூா்: மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினா் உண்ணாவிரதம்

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூா் அருகே மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா்.

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூா் அருகே மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா்.

மேட்டூரை அடுத்த விருதாசம்பட்டி பிரிவு சாலையில் நடைபெறும் போராட்டத்துக்கு அச் சங்கத்தின் தலைவா் எஸ்.பெருமாள்பிள்ளை தலைமை வகித்தாா். செயலாளா் தாஹிா், பொருளாளா் நளினி, மறைந்த மருத்துவா் விவேகானந்தன் மனைவி திவ்யா மற்றும் இவரது 4 வயது மகன் பிரித்திவிராஜ் ஆகியோா் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பதவி உயா்வு கலந்தாய்வில் பாதிக்கப்பட்ட 22 அரசு மருத்துவா்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் கலைவதற்காக அரசு மருத்துவா்களுக்காக வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ உடனடியாக 2017 முதல் அமல்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com