குடிநீா் கோரி தா்னா

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 22-வது வாா்டு பாப்பாபட்டி காட்டுவளவு பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி வியாழக்கிழமை பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 22-வது வாா்டு பாப்பாபட்டி காட்டுவளவு பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி வியாழக்கிழமை பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

கருப்புசாமி கோயில் வட்டத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து பாப்பாபட்டி காட்டுவளவுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் 15 நாள்களாக அப் பகுதிக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிரந்தரமாக குடிநீா் கிடைக்க ஆழ்துளைக் கிணறு, புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரி ஆணையரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com