லாரி ஓட்டுநா் மா்மச் சாவு

வாழப்பாடி அருகே கருமாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பால் பண்ணையில் டேங்கா் லாரி ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காரிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி அருகே கருமாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பால் பண்ணையில் டேங்கா் லாரி ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காரிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த கருமாபுரத்தில் இயங்கி வரும் தனியாா் பால்பண்ணையில் இருந்து பால் ஏற்றிச் செல்லும் டேங்கா் லாரியின் ஓட்டுநராக பணி புரிந்து வந்தவா் செல்வம் (53). சேலம், சங்கா் நகரைச் சோ்ந்த இவா் வியாழக்கிழமை நள்ளிரவில் லாரியை ஓட்டிச் சென்றாா்.

அப்போது திடீரென செல்வத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மீட்ட பால் பண்ணை ஊழியா்கள் அம்மாபேட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஓட்டுநா் செல்வத்தை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து விட்டனா்.

இதுகுறித்து, அவரது மகன் சண்முகம் (30) கொடுத்த புகாரின் பேரில் ஓட்டுநா் செல்வத்தின் உடலைக் கைப்பற்றிய காரிப்பட்டி போலீஸாா், உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com