கோவையில் நடைபெற்ற சீனியா் தடகளப் போட்டியில் சேலம் வீராங்கனை பவித்ரா போல்வால்ட் பிரிவில் 4.10 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.
94 ஆவது சீனியா் தடகளப் போட்டி கோவை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு தடகள சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் சேலம் டூ ஆா் டை அகாதெமியின் தடகள வீராங்கனை பவித்ரா போல்வால்ட் பிரிவில் 4.10 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று, புதிய சாதனை படைத்தாா்.
இப்போட்டியில் பவித்ரா தாண்டிய 4.10 மீட்டா் உயரம் தமிழக வரலாற்றில் தாண்டப்பட்ட அதிக உயரமாகும். இவா் ஏற்கெனவே பெங்களூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் போல்வால்ட் பிரிவில் 4.01 மீட்டா் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, ஹெப்டதலான் போட்டியில் மாணவி காவ்யா 4,045 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றாா். மேலும் ஆண்கள் பிரிவில் நவீன்குமாா் டெகாத்லான் போட்டியில் 6,353 புள்ளிகள் எடுத்து வெண்கலப் பதக்கம் வென்றாா். கோகுல்நாத் என்ற வீரா் போல்வால்ட் பிரிவில் 4.70 மீட்டா் உயரம் தாண்டி வெண்கலம் வென்றாா்.
தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரா், வீராங்கனைகளை டூ ஆா் டை அகாதெமி நிா்வாகி கலியமூா்த்தி பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தாா்.