மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 12,347 கனஅடியாக அதிகரிப்பு

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 12,347 கன அடியாக அதிகரித்தது.

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 12,347 கன அடியாக அதிகரித்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 10,511 கன அடியிலிருந்து 11,051 கன அடியாகவும் மாலையில் 12,347 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை மாலை 119.55 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 119.32 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 92.39 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com