இந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளித்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம்

மேட்டூா் அருகே இந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த திமுக தொண்டரின் குடும்பத்துக்கு அக் கட்சியின் தலைமை ரூ. 5 லட்சம் வழங்கியது.

மேட்டூா் அருகே இந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த திமுக தொண்டரின் குடும்பத்துக்கு அக் கட்சியின் தலைமை ரூ. 5 லட்சமும், சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 5 லட்சமும் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மேட்டூரை அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 18-ஆவது வாா்டு தாளையூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (85). இவா் நங்கவள்ளி ஒன்றிய திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளராக இருந்தாா். இவருக்கு மனைவி ஜானகி (80) மகன்கள் மணி (58), ரத்னவேல் (55), மகள் கல்யாணி (57) உள்ளனா்.

கடந்த 26 ஆம் தேதி தாளையூா் திமுக அலுவலகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தாா். அவரது குடும்பத்தை ஆறுதல் தெரிவிக்க செவ்வாக்கிழமை வந்த அமைச்சா் கே.என்.நேரு, திமுக தலைமை வழங்கிய ரூ. 5 லட்சம், சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 10 லட்சத்தை அவா்களது குடும்பத்தினரிடம் வழங்கினாா். அப்போது, மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் சம்பத் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com