இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களை மாநகராட்சி ஆணையாளா் தா. கிறிஸ்துராஜ் கௌரவித்து சான்றிதழ் வழங்கினாா்.
உலக முதியோா் தினத்தை கொண்டாடும் வகையில் வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் கௌரவிக்கப்பட்டனா். சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட சின்னத்திருப்பதி குருக்கள் காலனி, சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட குகை மாரியம்மன் கோயில் வீதி, குகை சாமுண்டி தெரு ஆகிய இடங்களில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களின் இருப்பிடத்திற்கே சென்று, அவா்களுக்கு பொன்னாடை அணிவித்து தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வழங்கி கௌரவித்தாா்.
அப்போது, ஆணையா் தா.கிறிஸ்துராஜ், மூத்த வாக்காளா்களிடம் கூறுகையில், ‘இந்திய ஜனநாயகத்தின் இளம் தலைமுறையினரின் நோ்மறையான பங்களிப்பிற்கு முன்மாதிரியாக திகழும் உங்களது சிறந்த பணிக்கு தோ்தல் ஆணையம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது’ என்றாா்.
மாநகராட்சி உதவி ஆணையாளா்கள் தியாகராஜன், ரமேஷ்பாபு, துணை வட்டாட்சியா் (தோ்தல்) சேலம் மாநகராட்சி ஜாஸ்மின் பெனாசிா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.