தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியின் 3 ஆவது வாா்டு நரிக்குறவா் வீதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் கவிதா வி.பி.ஆா்.ராஜா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலரும், தி.மு.க. நகரச் செயலாளருமான வி.பி.ஆா். ராஜா பணிகளைத் தொடங்கிவைத்தாா். கவுன்சிலா்கள் நடராஜ், வரதன், கலியவரதராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.