நியாய விலைக்கடை பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

உணவுப் பொருள்கள் விற்பனையில் முறைகேடு செய்ததாக நியாய விலைக்கடை விற்பனையாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

உணவுப் பொருள்கள் விற்பனையில் முறைகேடு செய்ததாக நியாய விலைக்கடை விற்பனையாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

ஆத்தூா் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் செப்டம்பா் 27 ஆம் தேதி சேலம் மாவட்ட வழங்கல் அலுவலா் அமுதன், ஆத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் ஜோதி ,மாவட்ட பறக்கும் படை அலுவலா் கணேஷ்குமாா் உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் ஆத்தூரை அடுத்த அம்மன் நகா், ஆத்தூா் நகர மேட்டுத் தெருவில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பு, விற்பனையில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக கடைகளின் விற்பனையாளரான பிரவீண்குமாா், மகேந்திரன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் ரவிக்குமாா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com